Thursday, October 19, 2023

தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி அக் 19-

நல்லம்பள்ளி ஒன்றியம் பாலவாடி கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம் பெ.சுப்ரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு முகாமில் தாது உப்பு கலவை வழங்குதல், சினை ஊசி போடுதல்,
சிகிச்சை மற்றும் சிறு அறுவை சிகிச்சை
கால்நடை கண்காட்சி, குடனர்புண் நீக்கம்,  தீவன பயிர் கண்காட்சி ஆகியவற்றை தொடங்கி வைத்தார் இறுதியில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் திரு.வைகுந்தம்,  மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் இரவி,  தொண்டரணி துணை அமைப்பாளர் காந்தி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்,  மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home