Friday, November 10, 2023

சித்ரா கார்மென்ட்ஸ் சார்பில் 1000 நபர்களுக்கு மதிய உணவு

தருமபுரி நவ 10-

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 1000 க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பார்வையாளர்கள் என்று நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தர்மபுரி ரோட்டரி சங்கம், மை தர்மபுரி அமைப்பு சார்பில் நல்லம்பள்ளி சித்ரா கார்மெண்ட்ஸ் உரிமையாளர்களான கோபி, சித்ரா ஆகியோருக்கு 15 ஆவது திருமண நாளை முன்னிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home