Friday, December 8, 2023

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தருமபுரி டிசம்பர் 8-

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 200  மரக்கன்றுகள் நடும் விழா 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் மின் தகனமேடை அருகில் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மற்றும் பென்னாகரம் சோஷியல் ஆக்டிவிட்டி கிளப் ஏற்பாட்டில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்ட பணியை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி் Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.

பென்னாகரம் பேரூர் கழக செயலாளர் , மற்றும் பேரூராட்சி தலைவர் திரு.வீரமணி மற்றும் பென்னாகரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.முருகேசன் அவர்கள் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.வைகுந்தன் , பேரூராட்சி துணை தலைவர் வள்ளியம்மாள் , முன்னாள் ஒன்றிய செயளாலர் காளியப்பன் , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இளையசங்கர் , வானவில் சண்முகம் , அன்பழகன் , கெளதம் , பேரூராட்சி கவுன்சிலர்கள் பச்சையப்பன் , முரளி , குணாளன் , பவுனேசன் , சுமதி வெங்கடேசன் , ஷானு , பூவரசன் , மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் மாரி, சின்னசாமி , யாரப்ஜான் , கமலேசன் , செல்வராஜ் , சுகுமார் , ரவி , வினோத் தொண்டு அறக்கட்டளை அன்பரசு , முருகேசன் , தேவகி , அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home