Thursday, December 28, 2023

அரூரில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் கிராம செழிப்பு விரிவாக்கதிட்ட பயிற்சி முகாம்

அரூர் டிச 28-

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திட்ட இயக்குநர் பத்ஹீ முகமது நசீர் உத்தரவின் பேரில் கிராம செழிப்பு விரிவாக்க திட்டம் தொடர்பான பயிற்சி வட்டார மேலாளர் அறிவழகன்,
தலைமையில் நடைபெற்றது.

கிராமத்தின் குடிநீர், சுகாதாரம், சமூக மேம்பாடு, பொருளாதார வாழ்வாதார
மேம்பாடு உள்ளிட்ட கிராம வளர்ச்சி
திட்டம் குறித்து. மாவட்ட வள பயிற்றுனர்
ஜி.பெருமாள், பயிற்சி அளித்தார்.இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மார்கரெட், ஊராட்சி மன்ற தலைவர்கள்,
செயலர்கள், ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு செயலாளர்கள் பயிற்சி பெற்றனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home