அரூர் ஜம்மணஅள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
அரூர் பிப் 16-
அரூர் ஊராட்சி ஒன்றியம்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம். தர்மபுரி மாவட்டம். ஜம்மணஅள்ளி. கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில். ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள். பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள். அவர்களின் பெற்றோர்கள். ஊர் பொதுமக்கள். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள். அனைவரும் கலந்து கொண்டனர்.
பள்ளியின் ஆண்டரிக்கையை. பள்ளியின் ஆசிரியர் திரு தமிழ்மணி அவர்கள் வாசித்தார். அதனை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு அன்பரசன் அவர்கள் வழிமொழிந்தார். விழாவின் நிறைவில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திரு அறிவழகன் அவர்கள் நன்றி கூறினார்.
Labels: அரூர்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home