Friday, February 27, 2026

மூத்த தம்பதியினர்களுக்கு சிறப்புசெய்து அழகு பார்த்த மணிதாபிமாணம் கொண்ட மணிதர்கள் நெகிழ்ச்சியடைந்த மூத்த தம்பதியினர்.


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பொயணப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டவர் செல்லியம்மன் திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மூத்த தம்பதியினர்களுக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு செய்தல் நிகழ்ச்சி அறநிலையத்துறை செயல் அலுவவலர் ஜெயஸ்ரீ தலைமையில், பொயணப்படி முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர்,கவுண்சிலர்,மதிமுக கட்சியின் மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளருமான இரா.சம்பத்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் மூத்ததம்பதியினர்களுக்கு சிறப்பு செய்வதை கண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிறிப்பலைகளோடு மாகிழ்ச்சியைடைந்து வாழ்த்தினார்கள்.

உபயதாரர் பழக்கடை பொயணப்பாடி செந்தாமரை முத்துராமன் ஏற்ப்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக கிளைச்செயலாளர் பாலகிருஷ்ணன்,பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைக்கண்டு ஆழ்ந்த கண்ணீர் விட்ட மூத்ததம்பதியினர்கள் நெகிழ்ச்சியைடந்தனர் மேலும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home