முதலமைச்சர் வருகை - முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் அரங்குகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு


தருமபுரி ஜூலை 4-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.7.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரக பகுதிகளில் துவக்கி வைத்தல் தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் இன்று நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார் 

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகள் 

மேடை அமைய உள்ள இடத்தினையும் பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் , பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார் 
 
 மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தர்மபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார் குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலைவாழ் மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான பேருந்து வசதி சாலை வசதி மற்றும்  தலைமை  
மருத்துவமனை கூடுதல் கட்டிடங்கள் 

அரசு பள்ளி கட்டிடங்கள் 

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் , என பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்துள்ளார் 

11 .7 .2024 அன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான

 மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைக்க உள்ளார்கள் 

இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பேருந்துகளை துவக்கி வைத்து

விவசாயிகள், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்கள்
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு இதே தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை துவக்கி வைத்து பெண்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து அவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என சுழல் நிதிகளை வழங்கி பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார் அவர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் இன்று ஆலமரம் போல் படர்ந்து உள்ளது

கலைஞர் வழியில் நல்லாட்சி செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் அறிவித்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தினால் இன்று 1 கோடியே 18 லட்சம் குடும்பத் தலைவிகள் உரிமைத்தொகை மாதம் ரூ. 1000 பெற்று பயனடைந்து வருகிறார்கள்
என மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார் 
இந்த ஆய்வின்போது 

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி,   மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்சிலி ராஜ்குமார்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ஸ்டீபன் ஜோசுபாதம்,   முன்னாள் அமைச்சர் 
திரு .பழனியப்பன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் சுப்ரமணி,  தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர்
திருமதி. காயத்ரி, தனித்துணை ஆட்சியர் திருமதி. தனபிரியா,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் வட்டாட்சியர் திருமதி. பார்வதி  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காவல்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال