Monday, September 18, 2023

அரூரில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாள் விழா



அரூரில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 145- வது பிறந்தநாள் விழா நகர செயலாளர் முல்லைரவி தலைமையில்  கொண்டாடப்பட்டது.

முன்னாள் ஒன்றிய செயலாளரும்  அரூர் பேரூராட்சி துணைத்தலைவருமான சூர்யாதனபால் கலந்து கொண்டு பெரியாரின்  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி  சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர் பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள  பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்,  நகர துணை செயலாளர்கள் விண்ணரசன், செல்வதயாளன்,  கணேசன்,  அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் கு.தமிழழகன் தீ.கோட்டிஸ்வரன்,   எம்.என்.எஸ். முருகேசன், குமரன்,  அறங்காவலர் குழு உறுப்பினர் ஓவியர்குப்பன், ரவி,  ஐடி விங் சுரேஷ்குமார்,   ஒன்றிய பிரதிநிதி கணேசன்,   சூர்யாவெங்கடேசன்,  ரமேஷ் மாது, சத்யானந்த், விமல், முனுசாமி மாதேஸ்வரன், செல்வம், கணபதி, இருதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home