Saturday, September 30, 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

 கன்னியாகுமரி  செப் 30-

முன்னாள் முதலமைச்சர்  டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரீதர் தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்  ரெ.மகேஷ் அவர்கள் முன்னிலையில்
மாண்புமிகு சிறுபான்மை அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் அவர்களும் மாண்புமிகு அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களும் வழங்கினர்.  மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் திரு ஆனந்த்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு அகஸ்தீசன், துணை அமைப்பாளர் திரு சரவணன், துணை மேயர்  திருமதி மேரி, பிரின்சிலதா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home