Monday, September 25, 2023

தர்மபுரி மூடப்பட்ட கடையில் திடீர் தீ விபத்து

தர்மபுரி செப் 25-

தருமபுரி கடை வீதியில் பூஜை சாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் திடிரென தீ விபத்து..

எப்பொழுதும் பரபரப்பாக இருந்து வரும் தருமபுரி கடை வீதியில் இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்து முடித்தனர்

கடையில், எண்ணை, தேன், திரி, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, துணி வகைகள்,பாக்கு மட்டை, உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இருந்ததால் தீ பற்றி எரிந்தே கொண்டே இருந்தது, தீ அருகேவுள்ள மற்ற கடைகள்,குடியிருப்புகளுக்கு பரவிவிடாமல் தடுக்க தண்ணீரை பீய்ச்சியடைத்து தீயை அணைத்தனர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து நடந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தீயை அணைத்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது..

மூடப்பட்டிருந்த கடையில் தீ விபத்து நடந்திருக்கிறது, திடீர் தீ விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை..ஒரு லேளை மின்சார இணைப்பில் எதாவது உரசல் ஏற்பட்டு அதனால் தீ பற்றியிருக்குமோ என சந்தேககிக்கபடுகிறது, நடந்து முடிந்த தீ விபத்தில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பூஜை பொருட்கள் தீயில் கருகி வீணாகி இருக்கலாம் என கூறப்படுகிறது..

நல் வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, காயமோ எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home