திருவண்ணாமலையில் திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
திருவண்ணாமலை அக் 22-
பாராளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக் கனியை பறிப்போம். 2021ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமைத்த ஊர் திருவண்ணாமலை.திமுகவின் கோட்டையாக விளங்கும் ஊர் திருவண்ணாமலை. வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும்.திமுக தொண்டர்கள் தான் எனக்கான உற்சாகம். அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க வேண்டும்.அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்தி வருகிறோம். வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க வேண்டும். ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.மக்களின் தேவைகளை கேட்டு நிறைவேற்றி தர வேண்டும். திமுக அரசின் திட்டங்களை கூற நேரம் போதாது.எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்து, காலை சிற்றுண்டி திட்டம் உங்களின் திட்டமா ? என்று ஈபிஎஸ்-ஐ கேட்கிறேன்.சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை யார் ஆட்சியில் நடந்தது? திமுக குடும்ப கட்சி தான், கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கும் கட்சி.இவ்வாறு அவர் கூறினார்.
Labels: அரசியல்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home