Saturday, December 30, 2023

தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தருமபுரி தென் பென்னை ஆற்றில் 1.75 இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன


தருமபுரி டிச 31

காரிமங்கலம் வட்டம் மொரப்பூர் வட்டாரம் கம்பைநல்லூரில் உள்ள K. ஈச்சம்பாடி தென்பெண்ணை ஆற்றில் கடந்த 29 ம் தேதி தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2022 - 23 -ன் கீழ் 1.75 இலட்சம் கட்லா, ரோகு, மிர்கால், சேல்கெண்டை, கல்பாசு போன்ற நாட்டின மீன் குஞ்சுகள் தென்பெண்ணை ஆற்றில் மீன் உற்பத்தி அதிகரிக்கும் பொருட்டு ஆற்றில் விடப்பட்டது. 

தருமபுரி மீன்துறை துணை இயக்குநர், சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மீன்துறை உதவி இயக்குநர் கோகுலரமணன், மேட்டூர் உதவி இயக்குநர் உமா கலைச்செல்வி, மீன்வள ஆய்வாளர் அ.ஜெயஸ்ரீ மீன்வள சார் ஆய்வாளர் வெங்கடேசன், மற்றும் மீன்வள மேற்பார்வையாளர்கள் பூபதிராஜா, மகேந்திரன் வருவாய்த்துறை அலுவலர் மகாலிங்கம், நீர்வளத்துறை அலுவலர், கம்மைநல்லூர் மீனவர் கூட்றவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home