Wednesday, April 10, 2024

தர்மபுரி - பாமக கட்சியில் இருந்து 25 க்கும் மேற்பட்டோர் விலகி திமுகவில் இணைந்தனர்.


தர்மபுரி ஏப்ரல் 10-

தர்மபுரி கிழக்கு மாவட்டம் பாலக்கோடு கிழக்கு ஒன்றியம் பாமகவில் இருந்து 25 க்கும் மேற்பட்டோர் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு .தடங்கம் பெ.சுப்ரமணி EX.MLA அவர்களின் தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 
இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தர்மபுரி தொகுதி பார்வையாளர் திரு ஆ.கா.தருண் மாவட்ட கழகப் பொருளாளர் திரு தங்கமணி, மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி ரேணுகாதேவி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் திரு இளைய சங்கர், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு பெரியண்ணன்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் திரு கௌதம், சார்பணிகளின் துணை அமைப்பாளர்கள் வினோத்குமார் ,நவீன் மற்றும் கழக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home