புதுக்கோட்டை பிப் 24
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலத்தில் வில்லுணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலைக்கு (33 அடி உயரம்) புகழ்பெற்றது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இக்கோவிலில் மாசிமகத் திருவிழா வருகின்ற 02,03, 2026 திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை
ஆகிய இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது திருவிழா 15 நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். 14,15ஆம் நாள் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆசியா கண்டத்திலேயே மிக உயரமான குதிரை சிலைக்கு கடந்த காலங்களில் சிகினா பேப்பரில் மாலையாக கட்டி வாகனங்களில் கொண்டு வந்து குதிரை க்கு மாலை செலுத்துவார்கள். சிகினா பேப்பர் மக்கவதில்லை அதனால் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளாக சாகிதபூமாலை அல்லது மலர்களான பூக்களில் மாலையாக குதிரை சிலைக்கு மாலை அணிவிக்க நீண்ட தூரம் வரிசையில் நின்று பக்தர்கள் நேத்திக் கடனை செலுத்துவார்கள். அன்றையதினமும், தெப்பதிருநாள் அன்றும் இரண்டுநாட்கள் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். பந்தக் கால் முகூர்த்தம் வெகு சிறப்பாக நடைபெற்றன.
இக்கோவிலின் சிறப்பு திங்கள், வெள்ளிக்கிழமை வழிபாடுகள் மிகவும் சிறப்பானவை.
சிறப்பம்சங்கள்
பெரிய குதிரை சிலை கோவிலின் நுழைவாயிலில் 33-35 அடி உயரமுள்ள பிரம்மாண்ட குதிரை சிலை உள்ளது, இது ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலையாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு வில்லுண்ணி ஆற்றங்கரையில் கிடைத்த அய்யனார் சிலை, மீண்டும் அதே ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பெருங்காரையடி மிண்ட அய்யனார் என அழைக்கப்படுகிறார்.
திருவிழா மாசி மாதத்தில் நடைபெறும் மாசி மகத் திருவிழாவில் குதிரை சிலைக்கு ராட்சத மாலை அணிவித்து வழிபாடு செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குளமங்கலம் கிராமத்தில் வில்லுணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் அப்பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும், கலைநயமிக்க சிற்பங்களைக் கொண்ட இடமாகவும் விளங்குகிறது. அதனால் மார்ச் 02, 03 ஆகிய இரண்டு தினங்களில் 02ஆம் ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை விடவேண்டும் என விழா கமிட்டியார்கள், தெற்கு குளமங்களம், வடக்கு குளமங்களம், மற்றும் பல ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
புதுக்கோட்டை