Sunday, June 7, 2026

ஸ்ரீ ராதாருக்குமணி சமேத கிருஷ்ணன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழாவில்


கிருஷ்ணகிரி அருகே உள்ள சூரன்குட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள 
ஸ்ரீ ராதாருக்குமணி சமேத கிருஷ்ணன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழாவில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் 
பர்கூர் அருகே உள்ள சூரண்குட்டை கிராமத்தில் புதியதாக அமைந்துள்ள ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணன் மற்றும் ஏனைய பரிவர தெய்வங்களின் பிரதிஷ்டைகள் செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேக விழாவிற்கான கொடி ஏற்றத்துடன் துவங்கிபெற்று வந்தது,

மங்கள இசையுடன் துவங்கிய இந்த மஹா குப்பாபிஷேக விழாவினை முன்னிட்டு வேதபாராயணம் விஸ்வக்சேன ஆராதனை, பாலகணபதி பூஜை, கங்கனம் கட்டுதல், புண்ணிய வாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது.

இதன் முன்னதாக புன்னிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை மேளத்தாளங்களுடன் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர் பின்னர் ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணன் திருக்கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாக காலப் பூஜையில் வைத்து முதல் காலப் பூஜைகள் என பல்வேறு காலப் பூஜைகள் நடைப்பெற்றறு,

இதனைத் தொடர்து
காலை ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணன் மற்றும் ஏனைய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பு யாகப் பூஜைகள் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது
கோ பூஜைகளுடன் துவங்கிய இந்த யாகப் பூஜையின் போது பூர்ணாதி ஹோமத்துடன் கடம் புறப்பாடு நடைப்பெற்றது,

 இதில் யாகசாலையில் இருந்து மேளத்தாளங்களுடன் எடுத்து செல்லப்பட்ட புனித நீரை திருக்கோவில் விமான கோபுரங்கள் மற்றும்
ஸ்ரீ ராதாருக்குமணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர தீபாதரனைகள் பூஜைகளுடன் பக்தர்களுக்கு தீர்த்தப்பிரதமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து
ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணன் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமன திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரப் பூஜைகள் நடைப்பெற்றறு

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ ராதாருக்குமணி சமேத கிருஷ்ணன் சுவாமியை சூரன்குட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர் மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சூரன்குட்டை கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர்களான பி.சி. சேகர், பையம்மாள், சீனிவாசன், திம்மராயன், பெருமாள், இராம மூர்த்தி, நாகராஜ், 
அனுமந்த் , சீனன் உள்ளிட்ட 
சூரன் குட்டை கிராம மக்கள் 
ஒன்றுனைத்து சிறப்பாக 
செய்து இருந்தனர்.

Labels:

Sunday, May 3, 2026

பென்னாகரத்தில் குளிர்பானங்கள் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

தமிழகத்தில் கோடைவெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்து முறையாக விதிமுறைகள் படி பின்பற்றப்படுகின்றவா , லாப நோக்கில் கலப்படங்கள், தரம் குறைவான மூலப் பொருட்கள், தயாரிக்க சுகாதாரமற்ற நீர் உபயோகப்படுத்தப்படுகின்றனவா என தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு விதிமுறை மீறல்கள் இருப்பின் நடவடிக்கை மேற்கொள்ள மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் , எம்.பி.,பி.எஸ்., அவர்கள் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பென்னாகரம் மற்றும் வண்ணாத்திப்பட்டி, எட்டியாம்பட்டி, கடமடை, கலப்பம்பாடி, பெரும்பாலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஐஸ், ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் குளிர்பானங்கள் விநியோக, விற்பனை நிலையங்கள் மற்றும் பழகடைகள், பழரசங்கள் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வில் தயாரிப்பு நிறுவன சுற்றுப்புறம் மற்றும் உபகரணங்கள், மூலப்பொருள்கள் , சேர்மானங்கள், சர்க்கரை, லேபில்கள், தயாரிப்பு தேதி, முடிவு தேதி, பேட்ச் எண் , உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விவரங்கள் உரிய முறையில் அச்சிடப்பட்டுள்ளனவா, டிரை (வெள்ளை)ஐஸ், ஐஸ்கிரீம் இருப்பு, பராமரிப்பு, தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது. ஐஸ் , ஐஸ்கிரீம், கோன், குல்பி உள்ளிட்டவை தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரா என பார்வையிட்டு கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் உபயோகப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உபயோகப்படும் மூலப்பொருட்கள் தரமானதாகவும் உரிய காலாவதி தன்மை உடையதாக இருத்தல் அவசியம் எனவும் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் பராமரிக்க உரிய தலைஉறை, மேலங்கி அணிந்து பணியாற்றிட விழிப்புணர்வு செய்யப்பட்டது.  

ஆய்வில் பென்னாகரம் பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மொத்த குளிர்பான விற்பனை நிலையத்தில் ஒரு சில உரிய விபரங்கள் இல்லாத ஐஸ் டியூப் குழல் போன்ற பாக்கெட்டுகளில் பல்வேறு நிறங்களில் 
வைக்கப்பட்டிருந்தது .உடனடியாக அப்புறப்படுத்தி அது மாதிரியான உரிய விபரங்கள் லேபிள் இல்லாத சிறுவர்களை கவர்ந்து உடல் உபாதை ஏற்படுத்தும் குழல் டியூப் பானங்களை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் ரூபாய் ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் எட்டியாம்பட்டியில் ஒரு குளிர்பான மொத்த விற்பனை நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் உரிய லேபிள் விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தது கண்டு உடன் அதை திருப்பி அனுப்ப எச்சரிக்கை செய்து மேற்படி விநியோகிப்பாளர்க்கு உடனடி அபராதம் ரூபாய்.2000 விதிக்கப்பட்டது.

ஊடக வலைதளம் மற்றும் பத்திரிகை செய்தியில் வந்த புகார் அடிப்படையில் மில்க் ஷேக் வகைகளும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பிட்ட பிரபல பிராண்டு வகையில் இரு வேறு விதமான மில்க் ஷேக்குகள் புகார் தெரிவிக்கப்பட்ட கடையிலும் வேறு ஒரு உணவகத்திலும் சம்பந்தப்பட்ட மில்க் சேக் நிகழ்வு இடத்திலேயே கட் செய்து பார்வையிட்டு சோதிக்கப்பட்டதில் எவ்வித மாறுபாடும் காணப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரி சேகரம் செய்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. 

புகார் குறித்து கம்பெனி இடம் விசாரித்ததில் வாங்கிய மில்க் ஷேக் பாக்கெட்டுகளை முறையாக பராமரிப்பு இல்லாவிட்டாலும், நேரடி சூரிய ஒளிப் படும் இடத்தில் வைத்திருந்தாலோ, வெப்பம் அதிகம் இருந்தால் ஒரு சில பாக்கெட்டுகளில் பால் திரிந்து ஏடு போல் காணப்படலாம், வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.முன்பாக அது குளிர் நிலையில் இருந்து இருத்தல் வேண்டும் வாங்கிய பின் நன்றாக குலுக்கி குடித்தல் வேண்டும் என தெரியப்படுத்தினர்.
இது போன்ற தவறுகள் மேலும் தொடரும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. பழக்கடைகள், பழரசங்கள் விற்பனையாளர்கள் சுகாதாரம் பின்பற்றி விற்பனை செய்திடவும் உபயோகப்படுத்தப்படும் பழங்கள் தரமானதாகவும்,குடிநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீராக இருத்தல் அவசியம் என பரிந்துரை செய்யப்பட்டது. குளிர்பானங்கள் குடிநீர் கேன்கள் உள்ளிட்டவை நேரடி வெயில் படாமல் பராமரித்து விற்பனை செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Labels:

Friday, March 13, 2026

சிலிண்டர் விலை உயர்வு மற்றும் எரிவாய்வு சிலிண்டர்களின் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு  
மற்றும் எரிவாய்வு சிலிண்டர்களின் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை உடனடியாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை .
.................................................................
ஈராக் ,அமெரிக்கா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே மத்திய அரசு வணிக சிலிண்டர் மற்றும் வீடுகள் பயன்படுத்தப்படும்
சிலிண்டர்களுக்கான 
விலையையும்
அதிகரித்துள்ளது ,
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை ஓரக்கடைகள் மட்டுமின்றி ஹோட்டல்கள் 
சிலிண்டர்களின் தட்டுப்பாட்டினால்
மூடப்பட்டுவருகிறது,

மேலும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாய்வு சிலிண்டர்களும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர், குறிப்பாக சிலிண்டர்கள் புங்கிங் செய்ய முடியதால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய காலி சிலிண்டர்களுடன் சமையல் எரிவாய்வு அலுவலகங்ளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இது குறித்து கூறிய இல்லத்தரசிகள் ஏற்கனவே விலைவாசி உயர்வினால் எழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு வளைக்குடா நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினை காரணம் காட்டி
எரிவாயு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடிய எரிவாய்வு சிலிண்டர்களின் விலையை உயத்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திலும் எரிவாயு நிலையம் கிடைப்பது பெரும் சிறப்பு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக சமையலுக்கு தேவையான சிலிண்டர்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

பேட்டி சரண்யா

Labels:

வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

 விழாவிற்கு ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையயின் மூத்த செவிலியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

 விழாவிற்கு சாய் அப்போலோ நர்சிங் கல்லூரி முதல்வர் அன்பரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சாய் அப்போலோ உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி,தொழுதூர் முதல்வர்கள் பிரியதர்ஷினி, சுஷ்மிதா,கனிமொழி கலந்து கொண்டனர்.

 விழாவில் குத்துவிளக்கேற்றி விழாவை சாய் அப்போலோ கல்வி நிறுவனங்களில் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்த ஜோதி தொடங்கி வைத்தார் மேலும் மகளிர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டி,கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறந்த பெண்மணிகளுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர்.அம்பிகா தங்கதுரை வெள்ளி காயன், பரிசுகள் பொன்னாடை வழங்கி கெளரவித்தார்.

 மகளிர் தின சிறப்புகளை பற்றி கல்லூரியின் விரிவுரையாளர்கள் சிவரஞ்சனி,தீபா, நளினி சண்முகப்பிரியா, ராதா ஆகியோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர்கள் இறுதியில் இரண்டாமாண்டு மாணவி விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Labels:

அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் நிலையில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 
வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜசுந்தர் தலைமையில் கொடி அணிவகுப்பு மரியாதை நடந்தது.
 பேரணியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இந்தப் பேரணியானது பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் துவங்கி, வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி, பேருந்து நிலையம் , ஸ்தூபி மைதானம் வழியாக காவல் நிலையத்தை சென்றடைந்தது.இப்பேரணியில் கமாண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.

Labels:

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் புதுக்கோட்டை மார்ச் 13 புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக உள்ளது. தற்பொழுது ஈரான், இஸ்ரேல், ஈராக், பகுதியில் போர் நடந்துவருவதால் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் மும்மரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். நாளை பெட்ரோல் விலை அதிகரிக்கும் என பொய் பிரச்சாரம் பரவியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இருந்தும் அதிக விலைக்கு விற்பதாக நினைத்து பெட்ரோல் இல்லை என அறிவிப்பு பலகை போட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் 

புதுக்கோட்டை மார்ச் 13 புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக உள்ளது. தற்பொழுது ஈரான், இஸ்ரேல், ஈராக், பகுதியில் போர் நடந்துவருவதால் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் மும்மரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். நாளை பெட்ரோல் விலை அதிகரிக்கும் என பொய் பிரச்சாரம் பரவியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இருந்தும் அதிக விலைக்கு விற்பதாக நினைத்து பெட்ரோல் இல்லை என அறிவிப்பு பலகை போட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது

Labels:

Monday, March 2, 2026

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் திமுக - அதிமுக கருத்து மோதல்



தருமபுரி, மார்ச் 2 :

தருமபுரியில் இன்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வின்போது, அதிமுகவினர் திமுவினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில், தேர்தல் சிறப்பு நேர்க்காணல் (டிபேட்) நிகழ்ச்சி வள்ளலார் திடலில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன், திமுக சார்பில் தருமபுரி மக்களவை உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஆ. மணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் மூவரும் பங்கேற்றனர்.

நெறியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்து மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அதிமுக சார்பில் அன்பழகன் பேசும்போது, திமுக சார்பில் ஆ. மணி இடையிடையே பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள் நாற்காலிகளை தூக்கி எறிந்தனர். இதில் திமுக நிர்வாகியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் கண்காணிக்காப்பாளர் எஸ். எஸ் மகேஸ்வரன் மற்றும் தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இரண்டு கட்சியினரும் வெளியே சென்றனர் இதனையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

Labels: