திருமண வரவேற்பு விழாவில் மறைந்த தந்தையின் உருவப்படத்தை பார்த்து நெகிழ்ந்த மகள்


 தர்மபுரி பிப்ரவரி :24

தெய்வத் திரு.டாக்டர் செந்தில்குமார் ஸ்ரீமதி இல்லத் திருமண விழா வரவேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்கள் ஜீவபாரதி சத்தியமூர்த்தி அவர்களின் திருமண விழாவில் வான வேடிக்கை , மேள சத்தத்துடன் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியின் மூலமாக வரவேற்பு விழா நடைபெற்றது . இதில் வரவேற்பு விழாவின் போது மறைந்த தந்தையின் உருவப்படம் தருமபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது பரிசு பொருட்கள் சீர் வரிசைகள் மற்றும் தந்தையினுடைய உருவ படமும் வழங்கப்பட்டது தந்தையின் உருவப்படம் திறக்கும் பொழுது அப்பாவின் நினைவை கூர்ந்து மணமகள் ஆழ்ந்த கண்ணீருடன் குடும்பத்துடன் கண்ணீர் மல்க தந்தையின் உருவப்பட முன்பு நின்று மணமகள் ஆசி பெற்றனர் இந்த தருணம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆற்றியது பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மாவட்ட செவிலியர் தலைவி மதிப்பிற்குரிய ராஜேஸ்வரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அழகு மேற்பார்வை உலகநாதன் தர்மபுரி தேமுதிக திரு . இளங்கோவன் அதிமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் மருத்துவர் அசோக் சமூக ஆர்வலர் திரு. ஹரிபிரசாத் மருத்துவர்கள் கலைச்செல்வன் கல்பனா மற்றும் பல்வேறு துறையில் இருந்து வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவர் அசோக் குமார் வரவேற்றனர்..
Previous Post Next Post

نموذج الاتصال