பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து நினைவுகளை பகிர்ந்து மாணவர்கள் நெகிழ்ச்சி*
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது…
இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள்,மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதே போல கல்லூரியில் பல்வேறு துறை பேராசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள்,ஊழியர்கள், மேனேஜ்மெண்ட் நிர்வாகத்தினர் என நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்..
நீண்ட வருடங்களுக்கு பின்பு தங்களது ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்த கொண்டதோடு,தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தின் தாளாளர்கள் சுகுணா மற்றும் லட்சுமி நாராயணசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்று நினைவு பரிசை வழங்கி மகிழ்ந்தனர்..
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்..
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் படித்த பழைய வகுப்பறைகளை பார்வையிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்தனர்..
நிகழ்ச்சியில் சுகுணா பொறியியல் கல்லூரி செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், முதல்வர் மகுடீஸ்வரன்,
இயக்குனர் சேகர், சுகுணா பாலிடெக்னிக் டீன் ரம்யா, உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்..