பள்ளிப்பட்டியில் காளியம்மள் 4-ம் ஆண்டு மயானத்தில் அசுரன் சூறையாடும் திருவிழா

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் காளியம்மன் மற்றும் சுடலை மணி கருப்பசாமி மாசி அம்மாவாசையில் மயானத்தில் அசுரனை சூறையாடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக  நடைபெறுவது வழக்கம்.

நேற்று அதிகாலை பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மள். சுடலை மணி கருப்பசாமி ஆகிய திருக்கோவிலில் பூஜை செய்து மயானத்தில் உள்ள அசுரன் உருவ  சிலையை குத்தி வதம் செய்யப்பட்டது. பிறகு ஆடு கோழி ஆகியவை பலியிட்டு பக்தர்கள் காளியம்மாள் சாமியே வழிபாடு செய்தனர். மயணத்தில் உள்ள நவதானிய படையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


அது தொடர்ந்து காளியம்மாள். சுடலை மணி கருப்பசாமி ஆகிய வேடம் அணிந்து மயணத்தில் இருந்து காளியம்மாள் கருவறை வரைக்கும் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லியபடி நடந்தே சென்று காளியம்மாள் கோவில் கருவறையில் கும்ப படையலிட்டு பக்தர்களுக்கு சாமி சிறப்பு அலங்காரத்தில்  காட்சியளித்தார். மாசி மாத அமாவாசை விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Previous Post Next Post

نموذج الاتصال