Saturday, February 21, 2026

ரூ 57 கோடி மதிப்பில் 9- கிமீ நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார்


திருவண்ணாமலை 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஆற்காடு திண்டிவனம் சாலை இருவழி பாதையாக இருந்தது அதனை நான்கு வழி பாதையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பாலங்கள் தடுப்பு சுவர் உள்ளிட்டவை கட்ட ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டது அதேபோல் காஞ்சிபுரம் வந்தவாசி திண்டிவனம் சாலை இரு வழிப்பாதையாக இருந்தது அதனை நான்கு வழி பாதையாக அகலப்படுத்த ரூபாய் 48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாலங்கள் தடுப்புச் சுவர் பேருந்து நிறுத்த மிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது ஆக மொத்தம் 57 கோடி மதிப்பில் மொத்தம் 9- கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் சந்திரன் உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் உதவி பொறியாளர்கள் கருணாகரன் லோகராஜா திமுக நகர செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் ஆரியத்தூர் பெருமாள் கே. ஆர்.பி.பழனி உள்பட பலரும் கலந்து கொண்டனர்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home