திருப்பூரில் தேமுதிக கொடி கம்பம் கல்வெட்டு உடைப்பு: போலீசில் புகார்

திருப்பூர், செப்.12-

திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் விசைத்தறி பி.ஆர். குழந்தைவேல், மாநகர காவல் உதவி ஆணையாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகர் மாவட்டம், கொங்கு தகர் பகுதி சார்பில் தே.மு.தி.மு., நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா,
கட்சியின்19ம் ஆண்டு துவக்க நாள் விழா 
நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கொங்கு மெயின்ரோடு, கொடிக்கம்பம் ரவுண்டானா பகுதியில் கட்சி கொடியேற்று விழா, கல்வெட்டு திறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் தே.மு.தி.க.,கட்சிக்கும், தலைவர் விஜயகாந்த் க்கும் களங்கம் விளையிக்கும் விதமாக நேற்று நள்ளிரவு சில சமூக விரோதிகள் கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தியும், பிளக்ஸ் பேனர்களை கிழித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி கழக கல்வெட்டை உடைத்தும், பிளக்ஸ் போர்களை கிழித்தும் சேதப்படுத்திய நபர்களை காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post

نموذج الاتصال