தருமபுரி அக்-21,
தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி காப்பாளர் சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தேவன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் எம்.வேனு,ஆர்.மூர்த்தி,எம்.அன்பழகன் ,எஸ்.தினமணி,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக எஸ்.பச்சியப்பன்,மாவட்ட செயலாளராக ஜி.எம்.சங்கர்,மாவட்ட பொருளாளராக ஏ.மணிவணன்,ஆகியோரும் துணை தலைவர்களாக எம்.மகேஸ்குமார்,டி.மணிகண்டன்,துணை செயலாளர்களாக என்.மாரியப்பன்,பி.பச்சியப்பன்,இணைச்செயலாளர்களாக கே.பொன்னரசு,எஸ்.சரவணன்,பிரச்சார செயலாளர் ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.விடுதி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் .புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags
தர்மபுரி