கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான அரிசி உட்பட மளிகை பொருட்களை முன்னாள் அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன் வழங்கினார்

தூத்துக்குடி டிச 31.

முன்னாள் முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கேற்ப கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி எம்ஜிஆர் நகர்பகுதி மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை முன்னாள் அமைச்சர் முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாநில கழக வர்த்தக அணி செயலாளர் சித செல்ல பாண்டியன் வழங்கினார்

மேலும் மேற்படி பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரிசி பை சீனி கோதுமை ரவா மைதா போர்வை சேலைகள் உட்பட ஏராளமான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் வழங்கினார்

நிகழ்ச்சியில் 
தூத்துக்குடி நாசரேத் திருமண்டுல சண்முகபுரம் பேராலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர். மாவட்டஅம்மா பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன். முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ராஜகோபால். முன்னாள் நகர மன்ற தலைவர் மனோஜ் குமார். மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் வழக்கறிஞர் ஜேஜே குமார். தூத்துக்குடி வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ். வடக்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜன் கண்ணா. . அம்மா பேரவை செயலாளர் காசி. வட்ட பிரதிநிதி அய்யப்பன். உட்பட ஏராளமான கழகத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Previous Post Next Post

نموذج الاتصال