ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்


தர்மபுரி, டிச.27-

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி
சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் 

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசன விழா 

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி இன்றுஅதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் ஆருத்ரா தரிசன காட்சியும்,சாமிக்கு மகா தீபாராதனை மற்றும் உபகார பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு திருவாதிரை களி சிறப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை சாமிக்கு பால், பன்னீர், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஆருத்ரா தரிசன காட்சியும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
குமாரசாமிப்பேட்டை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாம சுந்தரி உடனாகிய ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு கோவில் வளாகத்தில் பால், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பல்வேறு வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனக் காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சிவகாமசுந்தரி உடனாகிய ஸ்ரீ ஆனந்த நடராஜர் மற்றும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சாமி திருவீதி உலா நடைபெற்றது.


இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவில், தர்மபுரி ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவில், சவுலுப்பட்டியில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய ஆதிலிங்கேஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் சிவன் கோவில், பழைய தர்மபுரி லிங்கேஸ்வரர் கோவில், மற்றும் தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் காவிரி அம்மன் உடனாகிய தேசநாதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
Previous Post Next Post

نموذج الاتصال