தர்மபுரி ஏப்ரல் 13-
வறட்சியை தாங்கி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பி பி எஃப் எம் கரைசல் குறித்து திரு.மு.இளங்கோவன், தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அவர்கள் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளதாவது.
பி பி எஃப் எம் என்பது பிங்க் நிறமி ஃபேகல்டேட்டிவ் மெத்திலோட்ரோப் நுண்ணுயிர் வறட்சியை தாங்கி வளர உதவுகிறது. இது சுருக்கமாக பிபி எஃப் எம் கரைசல் என்று அழைக்கப்படுகிறது தற்போது நிலவி வரும் கடும் வெப்ப சூழ்நிலையில் பயிரிடப்பட்டுள்ள நெல், உளுந்து, கடலை போன்ற பயிர்கள் அதிக வெப்பத்தினால் நீர் அழுத்தம் ஏற்பட்டு இலைகள் மூலம் அதிக அளவில் நீர் ஆவி ஆகிறது. அதிக வெப்ப நிலையில் நெல் போன்ற பயிர்களில் மண், நீர், காற்று மூன்றும் அதிக வெப்ப நிலையில் இருக்கும். இந்த நிலையில் பயிர்களால் தேவையான அளவு சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு வேரின் வளர்ச்சி குறையும். இதனால் பயிரின் வளர்ச்சியும் குறைந்து காய தொடங்கும்.இந்த அழுத்தத்தை சரி செய்வதற்காக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பி பி எஃப் எம் எனும் பிங்க் நிற ஃபேகல்டேட்டிவ் மெத்திலோட்ரோப் நுண்ணுயிர் பயிர்களில் வறட்சியினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.இந்த பி பி எஃப் எம் நுண்ணீர் உயிரியல் அழுத்தத்திலிருந்து குறிப்பாக நீர் அழுத்தம், வறட்சி ஆகியவற்றிலிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நுண்ணுயிர் தயாரிப்பு ஆகும்.
தாவரங்களின் இலை பரப்புகளான ஃபைலோஸ்பியரில் வாழ்வதன் மூலம் மெத்தனால் மற்றும் பிற எளிய கார்பன் சேர்மங்களை வளர்ச்சிதை மாற்றம் செய்வதில் இந்த உருவாக்கத்தில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் முக்கிய காரணியாக இருக்கின்றன. ஏனெனில் வறண்ட நிலையில் முளைத்த உடனேயே ஆழமான வேர்களின் விரைவான வளர்ச்சியானது அதிக ஆழமற்ற வேரூன்றிய உயிரினங்களை விட போட்டித் தன்மை வாய்ந்த நன்மையை பெறலாம்.மேலும் இந்த பாக்டீரியாக்கள் தாங்கள் வசிக்கும் தாவரங்களின் மேற்பரப்பில் சர்க்கரைகள் மற்றும் ஆல்கஹால் போன்ற ஆஸ்மோ பாதுகாப்புகளை வெளியேற்றுகின்றன.நீரின் நீராவி டிரான்ஸ்பிரேஷன் இழப்பை குறைப்பதற்காக நீர் அழுத்தத்தின் போது இலைகளில் உள்ள ஸ்டொமட்டோவை மூடுவதற்கும் இது உதவுகிறது.இந்த வழிமுறைகள் தாவரங்களை வறட்சி மற்றும் அதிக வெப்ப நிலையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.வறட்சியிலிருந்து தாவரங்களை பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல் இது தாவர வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.இலைகளின் பரப்பளவை அதிகரிக்கிறது.
குளோரோஃபில் உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. தாவர நோய்க் கிருமிகளால் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பை வழங்குகிறது. மேலும் பத்து சதவீதம் மகசூலை அதிகரிக்கிறது. இது பூக்கள், காய்கள் அமைத்தல் மற்றும் முதிர்ச்சி அடைதல் ஆகியவற்றில் ஆரம்ப நிலையை மேம்படுத்துகிறது. இதனால் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளை எளிதாக்குகிறது. இது பழத்தின் தரம் நிறம் மற்றும் விதையை எடையை மேம்படுத்துகிறது. நெல், கரும்பு, பருத்தி, வாழை, காய்கறிகள், பழங்கள் ஆகிய பயிர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மெத்திலோ பாக்டிரியம் 18 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் பி பி எஃப் எம் கரைசலை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து டெங்க்கு ஒரு லிட்டர் கரைசல் ஒன்பது லிட்டர் நீர் கலந்து மா விற்க்கு 7 டேங்க், ஏக்கருக்கு 21 டேங்க் தெளிக்க வேண்டும்.
நுண்ணுயிர் உருவாக்கும் மெத்தனால் அதிக வெப்பநிலையில் இலை துளைகள் மூலம் அதிக ஆவிகளை தடுக்கிறது. பயிரின் வளர்ச்சி காலம் விதைத்த 30 நாள் கழித்து, பூக்கும் 45 - 60 நாட்கள் மற்றும் தானியம் பழம் அமைக்கும் நிலை 90 - 105 நாள் கழித்து தேவைப்பட்டால், 30 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். அல்லது ஒரு சதவீத கரைசலில் விதைகளை 10 - 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து விதை நேர்த்தி செய்வதன் மூலமும் இதை பயன்படுத்தலாம்.
Tags
தர்மபுரி