தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி புதிய ஓய்வூதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை (TAPS) அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் சார்பில் சேலத்தில் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி என்ற வரிகளுக்கு ஏற்ப பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்னும் இருளை நீக்கி எங்கள் வாழ்வில் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை வழங்கி வாழ்வில் ஒளி ஏற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து
வீரபாண்டி வேல்முருகன் தலைமையில் நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இணை பேராசிரியர் முனைவர் முருகன், முதுநிலை பேராசிரியர் முனைவர் சீனிவாசன் அரசு கலைக்கல்லூரி மேட்டூர், முதுநிலை பேராசிரியர் திருநெல்வேலி நீல கிருஷ்ணபாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் சங்கத்தினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை பாபு தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து நன்றி அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை கேட்க இருக்கிறோம் என்று சேலம் வீரபாண்டி வேல்முருகன் அவர்கள் தெரிவித்தார்.