90 வயதான திமுக மூத்த முன்னோடிக்கு பாத பூஜை செய்து பொற்கிழி வழங்கி கவுரவித்த நெகிழ்ச்சி சம்பவம்

தருமபுரி செப் 29- 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேவுள்ள சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த திமுகவின் மூத்த முன்னோடியான மாரியப்பன் (90) அவர்களுக்கு பாத பூஜை செய்து, சால்வை அணிவித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் திருவுருவ படம் வழங்கியும், திமுக சார்பி்ல் வழங்கப்பட்ட பொற்கிழியும் வழங்கி கவுரபடுத்தப்பட்டது..
இது குறித்து, திமுக தருமபுரி மேற்கு மாவட்ட சுற்று சூழல் அணியி்ன் அமைப்பாளரும், முக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான கண்ண பெருமாள் அவர்கள் கூறும்போது, திமுகவின் மூத்த முன்னோடியான மாரியப்பன் அவர்களுக்கு 90 வயதாகிறது, சற்று உடல் நலன் பாதிக்கப்பட்டிருக்கிறார், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், அதில் திமுக முன்னோடிகளை கவுரபடுத்தி கட்சி சார்பில் பொற்கிழி வழங்கினார், உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததால், மாரியப்பன் அவர்களால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலை இருந்ததால், திமுக மூத்த முன்னோடியான மாரியப்பன் அவர்களை அவரது வீடு தேடி சென்று அவருக்கு பாதபூஜை செய்து, கட்சி சார்பில் வழங்ப்பட்ட பொற்கிழி அவரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மாரியப்பன அவர்கள் பேரரறிஞர் அண்ணா அவர்களின் நன் மதிப்பை பெற்றவர்களுள் ஒருவராக இருந்துள்ளார், ஒரு சமயம் அண்ணா அவர்களுக்கு சந்தையில் ஆடு ஒன்றினை வாங்கி கொடுத்த பழய நினைவுகளோடு மாரியப்பன் அவர்கள் இருந்து வருவதாகவும், முக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் திமுக வளர பாடுபட்டவர் மாரியப்பன் அவர்கள், அவரை கவுரபடுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சயடைவதாகவும், நெகிழ்ச்சியான இந்த தருணத்தில், திமுக தமிழக முதல்வருக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயதி ஸ்டாலின் அவர்களுக்கும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவி்த்த கண்ணபெருமாள்
திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களின் ஆலோசனைப்படி நடந்த இந்த நிகழ்ச்சியில், மாணவரணி துணை அமைப்பாளர், ஆர்.சி.பிரபு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதி ஓபிலி குமார், மற்றும் கிளை கழக செயலாளர்கள் துரோபதி,திருப்பதி, அண்ணாமலை, பழனி, பிரகாஷ், மாதேஷ், பரசுராமன், ரங்கசாமி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال