நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

சென்னை அக் 24- 

உலக கோப்பை கிரிக்கெட்டின் நேற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 283 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியில், கேப்டன் பாபர் அசாம் 92 ரன்களும், அப்துல்லா சாஃபீக் 58 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 284 எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 286 ரன்களை எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 113 பந்துகளில் 87 ரன்களும் எடுத்தனர். அதேபோல், அடுத்து களமிறங்கிய ரஹமத் ஷா 84 பந்துகளில் 77 ரன்களும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 45 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال