பருவ நிலைக்கு ஏற்ற விதைகள் உரங்கள் தர்மபுரி வேளாண் இடுபொருள் நிலையங்களில் தயார் நிலையில் உள்ளன

தர்மபுரி அக் 20-

நடப்பு ரபி பருவத்திற்கு தேவையான  7 மெட்ரிக் டன் நெல் ரகங்கள்,சிறு தானியங்கள் 15 மெட்ரிக் டன்,பயிர் வகைகள் 20.5 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 30 மெட்ரிக் டன்  விதை கிராமம் மற்றும் NFSM திட்டத்தின் கீழ் விநியோகம் செயிதிட தர்மபுரி வட்டாரத்தில் உள்ள 2 வேளாண் இடுபொருள் விற்பனை நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் நடப்பு ரபி பருவத்திற்கு தேவையான 1805 மெட்ரிக் டன் யூரியா,739 மெட்ரிக் டன் டிஎபி,494 மெட்ரிக் டன் பொட்டாஸ் மற்றும் 1533 மெட்ரிக் டன் நைட்ரஜன்,பொட்டாசியம் காம்ப்ளெக்ஸ் உரம்,104 மெட்ரிக் டன் சூப்பர் உரங்கள் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி போதுமான அளவில் கிடைத்திட அனைத்து தனியார் உரக்கடைகளிலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தரமான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துங்கள் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் தரக்கட்டுப்பாடு பிரிவின் மூலம் திடீர் ஆய்வு குலுக்கள் அமைக்கப்பட்டு தர்மபுரி வட்டாரம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிட உத்தரவிடப்படுள்ளது என்று தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மு.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.                                          
Previous Post Next Post

نموذج الاتصال