அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர் உதயநிதி செங்கல்பட்டு மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு

சென்னை அக் 18-

தமிழ்நாடு இளைஞர் நலன்   மற்றும்  விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எந்தவொரு மாவட்டத்துக்குச் சென்றாலும் அங்குள்ள அரசு மாணவர் விடுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசுக் கல்லூரி மாணவர் விடுதியில் நேற்று ஆய்வு செய்தார் .

விடுதி மாணவர் பதிவேடு, சமையல் கூடம், உணவருந்தும் இடம், உணவுப்பொருள் சேமிப்பு அறை, மாணவர்கள் தங்கும் அறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு . 

விடுதியில் உள்ள வசதிகள் குறித்து தமிழ்நாடு  இளைஞர் நலன் மற்றும் மற்றும்  விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் மாணவர்களிடம் கேட்டறிந்தோம். விடுதி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் தரமுடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விடுதி காப்பாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் - அதிகாரிகளை அறிவுறுத்தினார் .

Previous Post Next Post

نموذج الاتصال