சென்னை அக் 3-
இன்று (அக்.31) மாலை 6.30 மணிக்குத் தொடங்கவுள்ளஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலக முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி தரப்படவுள்ளது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை, ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள்,சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
Tags
சென்னை