சென்னை அக் 31-
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், போர்ச்சுகலில் நடைபெறவுள்ள வாகோ உலக கிக்பாக்சிங் (சீனியர் - மாஸ்டர்) போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொள்ளவிருக்கிற தமிழ்நாட்டின் 8-வீரர் - வீராங்கனையருக்கு உதவிடும் வகையில், தலா ரூ 1.50 இலட்சம் என ரூ12 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Tags
சென்னை