தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் மினி மாராத்தான் போட்டி.போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாராத்தான் போட்டி எஸ்பி துவக்கி வைத்தார்

தர்மபுரி அக் 15-

தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று காலை தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கத்தின் சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாராத்தான் போட்டி நடத்தப்பட்டது .

இந்த போட்டியை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் துவக்கி வைத்தார்.


தர்மபுரியில் இன்று காலை போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஓடியதை படத்தில் காணலாம்.
தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து 3500 மாணவர்கள் தன்னவாலர் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு முதல் பரிசாக 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பேசும்போது தர்மபுரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தடுக்கும் விதமாக பல்வேறு வகையில் விழிப்புணர்வு பணிகள் காவல்துறையை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களில் உள்ள அனைத்து பொதுமக்களும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுள்ளனர் .அதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே பொதுமக்கள் இடையேயும் பல்வேறு வகைகளை விழிப்புணர்வு பணிகளை காவல்துறை செய்து வருவதாகவும் தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் போதைப்பொருட்களை தடுக்கும் விதமான பணிகள் அனைத்தும் காவல்துறை மேற்கொள்ளும் எனவும் உரையாற்றினார் .

மேலும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது பள்ளி மாணவர்களுக்கு மாணவிகளுக்கு கல்லூரி மாணவர் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உற்சாகமளிக்கும் விதமாக அவர்களுக்கும் தனியாக மினிமராத்தான் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது . தனித்தனி பிரிவுகளில் இந்த மராத்தான் போட்டி நடத்தப்பட்டது . சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் ஓடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post

نموذج الاتصال