தமிழக கேரளா வனப் பகுதியில், இரு மாநில அதிரடி படை போலீசார் தொடர் கண்காணிப்பு

பந்தலூர்

தமிழக கேரளா எல்லை பகுதியாக உள்ளது, நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா .தற்போது வயநாடு பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக கேரளா வனப் பகுதியில், இரு மாநில அதிரடி படை போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணியில் குறித்து, நீலகிரி எஸ்.பி. பிரபாகர் நேரடி ஆய்வு செய்தார். சோதனை சாவடியில் மேற்கொள்ளப்படும் சோதனை பணிகள் மற்றும் புதிதாக வரும் வாகனங்களை சோதனை செய்வதன் விவரங்கள் குறித்து, காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ஆய்வு செய்தார். தற்போது தமிழக கேரளா எல்லையில் நக்சல்கள் நடமாடி வருவதால், சோதனை சாவடியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Previous Post Next Post

نموذج الاتصال