ரூ 46 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியை பூமி பூஜை தடங்கம் பெ.சுப்ரமணி அவர்கள் துவக்கி வைத்தார்

சென்னை நவ 1- 

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டாரெட்டிஹள்ளி ஊராட்சி மற்றும் தின்னஹள்ளி பகுதியை இணைக்கும் ஆற்றுப் பாலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA  அவர்கள் NRGS திட்டத்தின் கீழ்  ரூபாய் 46 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைப்பதற்காக நடைபெறும் பணியினை பூமி பூஜை  செய்து துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்  AS சண்முகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

 மிட்டாரெட்டிஅள்ளி பஞ்சாயத்து தலைவர்  திருமதி தனலட்சுமி சேகர்,  மற்றும் தின்னஅள்ளி ஒன்றிய க உறுப்பினர் சசிகுமார்,  மற்றும் ஊராட்சி செயலாளர் மாது, கிளைச் செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் மோகன், ஆனந்தன், மற்றும் சின்னசாமி, மாதுலிங்கம், ராஜவேல், சங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال