பென்னாகரம் நவ15-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டி பெரிய கடமடையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை கருப்புத் துணியால் மூடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் இதில் வீடு வழங்கும் திட்டம் கழிவறை வழங்கும் திட்டம் ஆடு வழங்கும் திட்டம் மாடு வழங்கும் திட்டம் ஆட்டு கொட்டகை மற்றும் மாட்டு கொட்டகை வழங்கும் திட்டம் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மாற்று திறனாளிகளுக்கு தடையில்லா சூழலை ஏற்படுத்த வேண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு மின்சார வசதி தெரு விளக்கு வசதி குடிநீர் வசதி கிராம மகளிர் வருமை ஒழிப்பு மகளிர் மேம்பாட்டு திட்டத்திலும் மஞ்சநாயக்கஹள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கும் பல்வேறு ஊழலை கண்டித்தும் சின்னகடமடைஏரி ஜீவா நகர் தாலஉப்ப ஏரிகளில் தூர்வாரிய முறைகேடுகளை கண்டித்தும் கிராமசபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வைக்கும் கோரிக்கைகளை ஏற்பதில்லை எனவும் மஞ்சநாயக்கனஹள்ளி பஞ்சாயத்து உட்பட்ட புறம்போக்கு நிலம் நீர் பிடிப்பு நிலம் குட்டைகள் வாய்க்காள்கள் போன்றவைகளை ஆக்கிரமித்தவர்களையும் கண்டு கொள்வதில்லை எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாவட்டத் தலைவர் கரூரான் மாவட்டத் துணைத் தலைவர் சின்ன மாதையன் வட்டத் தலைவர் சக்திவேல் வட்ட துணை தலைவர் மாரியப்பன் வட்ட குழு சாலம்மாள் மகேந்திரன் புவனேஸ்வரி சண்முகம் சக்தி ராஜேஸ்வரி கதிர்வேல் கமலேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார் இதில் பெரும்பாலை காவல் உதவி ஆய்வாளர் மோகன் சின்னமாதன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்
Tags
தருமபுரி