வீட்டை சேதப்படுத்திய நபர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார் மனு.

தருமபுரி நவ 15-

முன்னறிவிப்பின்றி வீட்டை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார் மனு. 

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதி காந்தி நகரில் வசித்து வரும் ராணி என்பவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு அரசாங்கம் வழங்கிய யூ டி ஆர் பட்டாவில் வீடு கட்டி குடியிருந்த வருகிறார் இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணி அளவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராமு என்பவர் கடப்பாரையை கொண்டு வீட்டின் மேலே போடப்பட்டுள்ள சிமெண்ட் சீட்டை உடைத்தார் சத்தம் கேட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்து விட்டோம்.ஏன் இப்படி செய்கிறீர்கள் முன் அறிவிப்பு இன்றி எங்கள் வீட்டை ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது இது எங்கள் நிலம் எங்களுக்கு சேர வேண்டியது என்று எங்களை அச்சுறுத்தும் வகையில் ராமு என்பவர் மிரட்டல் விடுத்தார் மேலும் உங்களை குடும்பத்தோடு கொன்று விடுவேன் என்று கூறினார் மேலும் நான் வருவாய்த் துறையில் பணிபுரிகிறேன் உங்களால் என்னை என்ன செய்ய முடியும் என்று எங்களை மிரட்டினார் மேலும் அதிகாரிகளிடம் மனு கொடுத்து சர்வேர்கள் அளந்து போதும் அவர் வருவாய்த் துறையில் பணிபுரிகிறார் என்பதால் அவருக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்படுகிறார்கள் எனவே எங்கள் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளித்தும் எங்கள் வீட்டை மீட்டுக் கொடுத்து எதிரிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுமாறு  அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Previous Post Next Post

نموذج الاتصال