மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுவிலக்கு, சைபர் கிரைம், குழந்தை திருமணம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி நவ 5-

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுவிலக்கு, சைபர் கிரைம், குழந்தை திருமணம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலை வரும், முதன்மை நீதிப தியுமான சுமதிசாய் பிரியா தலைமை தாங்கி பேசியபோது ஆன்லைன் கடன், பண இரட்டிப்பு மோசடி, குறித்தும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து, மொபைல் ஆப் மூலம் பணத்தாசை காட்டி மோசம் செய்வது, கஞ்சா, போதை பழக்கங்களால் உடல்ந லத்துடன் குடும்பங்களும் சீரழிவது, குழந்தை திருமணத்தை தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது.மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலைய கண்காணிப்பாளர் சரண்யா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான ஜெனிபர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال