தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை, வருவாய் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வருகை எதிரொலியாக பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி


சூளகிரி நவ 5-

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட துரை ஏரியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை, வருவாய் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வருகை எதிரொலியாக பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சூளகிரி தாசில்தார் சக்திவேல், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிலன் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். இதில் தீயணைப்பு மீட்புகுழு வினர் மிக தத்துருபமாக ஏரியில் விழுந்த ஒருவரின் உயிரை காப்பாற்றுவது போல நிகழ்த்தி காட்டினர். கிணறு , ஏரி, குளம் பகுதிகளில் விழுந்த வர்களை பொதுவாக பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் கேன்கள் , பிளாஸ்ட்டி பாட்டில்கள், காளி சிலிண்டர்களை இடுப்பில் கட்டி கொண்டு காப்பாற்ற முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.

Previous Post Next Post

نموذج الاتصال