பென்னாகரம் டிசம்பர் 21-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய செவிலியர்கள் இல்லை அடிப்படை மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை என்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் வனப் பகுதியை கடந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரம் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்க்க வேண்டிய நிலை உள்ளது என்றும் பொதுமக்கள் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்ததை அடுத்து இன்று திடீரென்று ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்ய பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார் அப்போது அங்கு வந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்துவிட்டு மருத்துவம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்றும் மருத்துவ அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார் அதனை அடுத்து மருத்துவர் அருண் இடம் வரும் நோயாளிகள் நலன் குறித்து சிகிச்சை அளிக்கப்படும் முறை குறித்தும் கேட்டறிந்தார் பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மக்களிடம் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள செவிலியர்களை பணி நியமம் செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் இடம் பேசுவதாகவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாகவும் வாக்குறுதி அளித்தார் இதனை அடுத்து இரவு நேரங்களில் வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை திறந்து இருக்க வேண்டும் என்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
Tags
தருமபுரி