தருமபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

தருமபுரி டிசம்பர் 21-

தர்மபுரியில் கடந்த 15ஆம் தேதி தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது இதில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இன்று க்ஷக் பதவி ஏற்று கொண்டனர். இதில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் சிவம் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செயலாளர் பதவிக்கு தர்மன், துணைத் தலைவர் பதவிக்கு முனிராஜ், பொருளாளர் பதவிக்கு சதாசிவம், துணை செயலாளராக குமரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.பின்னர் சக வழக்கறிஞர்கள் பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்துக்களை கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மூத்த முன்னால் வழக்கறிஞர் சங்க தலைவர் அப்புனு கவுண்டர் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال