தருமபுரி டிங23-
தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் கொட்டி தீர்த்த பெருமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய மக்களும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருப்பது நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..
அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு,சமையல் எண்ணை, ரவை, மைதா, சேமியா,உள்ளிட்ட மளிகை பொருட்களும், புடவை, வேட்டிகள், பெட்சீட், துண்டுகள், நாப்கின்கள் பாய்கள், குளியல் சோப்புகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், மற்றும் பிஸ்கட்டுகள், வறுக்கி உள்ளிட்ட திண்பண்டங்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் ஒன்று திரட்டி, தருமபுரி பேருந்து நிலையம் எதிரிலுள்ள அஹ்லே சுன்னத் ஜாமத்திடம் ஒப்படைத்தனர், இதனை தொடர்ந்து ஜமாத் தலைவர் முனவர் ஜான், செயலாளர் டி.எஸ்.எக்பால்,
பொருளாலர் முஸ்தாக், மாவட்ட முத்தவல்லி சங்க தலைவர் ஜப்பார் உள்ளிட்ட நிர்வாகிகள் பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை லாரி மூலம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர், முன்னதாக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொருட்கள் அனைத்தும் நல்லபடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனுப்பி வைத்தனர், இந்த நிகழ்வின் போது செயலார் பாபு, தருமபுரி மாவட்ட அரசு காஜி பஜல் கரீம் ஜமாத்துல் உலமா, சபை நிர்வாகிகள், ஹபிப்புல்லாஹ், நௌசாத், ஆசீப்,ஜிபேர்,உவேஸ்,மௌலானா முஹம்மதலி முன்னேற்ற சங்க தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் பலரும் கலந்து கொண்டனர்
Tags
தருமபுரி