கோயம்புத்தூர் பிப் 28-
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கோவையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியை நேரில் ஆய்வு செய்தார்.
மாணவர்கள் தங்குமிடம் - குளியலறை - உணவுக்கூடம் - அரிசி,எண்ணெய், மளிகை பொருட்கள் வைக்கக்கூடிய சேமிப்பு அறை உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு, அப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.
அங்கு தங்கி பயிலும் மாணவர்களிடம் விடுதியில் மேற்கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
விடுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களிடம் உறுதி அளித்தார் .
Tags
கோயம்புத்தூர்