சி.ஐ.டி.யு. சங்கத்தின் 14 வது ஆண்டு பேரவை கூட்டம் காந்திபுரம் கேரளா சமாஜ அரங்கில் நடைபெற்றது


கோயம்புத்தூர் ஜூலை 31-

கோவை மாவட்ட லாட்ஜ், ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு.14 வது ஆண்டு பேரவை கூட்டத்தில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது..


கோவை மாவட்ட லாட்ஜ், ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சங்கத்தின் 14வது ஆண்டு பேரவை கூட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள கேரளா சமாஜ அரங்கில் நடைபெற்றது..

 சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
 
சிறு பேக்கரிகள் வைத்து தொழில் செய்து வருபவர்களிடம் முறையில்லா வரிகளை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
 
ஹோட்டல்களில் தொழிலாளர் துறை ஆய்வு நடத்தி தொழிலாளர்களுக்கு அனைத்து சட்டசலுகைகளும் அமல்படுத்த வேண்டும்,
 
கேட்டரிங் தொழில் செய்யும் சமையல் தொழிலாளர்களுக்கு நலவாரிய பணப்பலன்களை அதிகப்படுத்த,விழா நடத்துபவர்களிடம் இருந்து, மண்டப உரிமையாளர் மூலம் இரண்டு சதவீதம் செஸ்வரி வசூல் செய்து நல வாரியத்தில் இணைக்க வேண்டும்,
 
இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு உண்டான சம்பள வரம்பு ரூபாய் 21 ஆயிரம் என்பதை வாபஸ் பெற்று அனைத்து தொழிலாளர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்,
 
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பெற்று வரும் இபிஎப் பென்ஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

கூட்டத்தில் ஆறுமுகம்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் செல்வகுமார், செந்தாமரை,
சந்தோஷ், தங்கராஜ் ,ராஜன், ராமச்சந்திரன், முஜீப்ரகுமான், ரத்தினக்குமார், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال