தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டத் தலைவர் எஸ். சிவசங்கர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணை செயலாளர் எம். பி. அர்ஜுனன் முன்னிலை வகித்தார்.வட்டச் செயலாளர் டி.இ. வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

 சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட துணைத் தலைவர் டி. கணேஷ் சிறப்புரை யாற்றினார்.

 10 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் கள் என்று பெயர் மாற்றி அரசா ணை வழங்க வேண்டும் . அவர் களுக்கு பதவி உயர்வு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.
20-ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் கள் என்று பெயர் மாற்றி அரசா ணை வழங்கிட வேண்டும். அவர் களுக்கு பதவி உயர்வு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.நகர நில அளவைப் பதிவேடு  பட்டா மாறுதலில் அரசு முதன்மை செயலர் அவர்களின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். நகர நில அளவைப் பதிவேடு பட்டா மாறுத லில் கிராம நிர்வாக அலுவலர் களின் பரிந்துரை செய்வது தொடர்பான உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும்.கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த் திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வல யுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன

இந்த ஆர்ப்பாட்டத்தில்,வட்டத் துணைத் தலைவர் ஆர் ரமேஷ் போராட்டக் குழு தலைவர் பி. திரு நாவுக்கரசு வட்ட ஒருங்கிணைப் பாளர் ஏ. ராஜ், வட்ட அமைப்புச் செயலாளர் எல். தண்டபாணி உள்ளிட்ட 60- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பினர்.
நிறைவாக,வட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்
Previous Post Next Post

نموذج الاتصال