தர்மபுரி குமாரசாமி பேட்டையில் கிருபானந்த வாரியார் சாமி பிறந்தநாள் விழா


தர்மபுரி, ஆக.26-

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் சாமி 119-வது பிறந்தநாள் விழா குமாரசாமிப்பேட்டை 
சிவசுப்பிரமணியசாமி கோவில் பின்புறம் தட்சணாமூர்த்தி மடத் தெருவில் நடைபெற்றது. 

விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் ஆர்.மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கே. ஸ்ரீதர் வரவேற்றார். பொருளாளர் மணிவண்ணன்,  ஊர் பிரமுகர்கள் குமார், வேலாயுதம், மோகன், சுந்தரம், சதாசிவம், டி.ஜி.மணி, அன்பு, மணி, இளங்கோவன், செல்வமணி, நிர்வாகிகள் கணேஷ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர்  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவர் சந்தோஷ் சிவா அன்னதானம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் உதயபானு, தவமணி, சேகர், பாபு, சோமசுந்தரம், துரை, பழனிசாமி, பூங்குன்றம், கண்ணன், பசுபதி, மோகன், மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
----
Previous Post Next Post

نموذج الاتصال