பொள்ளாச்சி செப் 24-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில், கிணத்துக்கடவு, வடக்கிப்பாளையம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில், 63 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அதிக பாரம் ஏற்றி, கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொக்கனுார், நடுப்புணி, வடக்கிப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.அதில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிய, 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறுகையில், ''கனிமவள லாரிகளில், அதிகளவு பாரம் ஏற்றிச் செல்வது குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. அதில், 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமுறை மீறல் குறித்து கண்காணிப்பு செய்யப் படுகிறது.
இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால், வாகனங்களின் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். டிரைவர் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்,'' என்றார்.
அதிக பாரம் ஏற்றி, கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொக்கனுார், நடுப்புணி, வடக்கிப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.அதில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிய, 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறுகையில், ''கனிமவள லாரிகளில், அதிகளவு பாரம் ஏற்றிச் செல்வது குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. அதில், 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமுறை மீறல் குறித்து கண்காணிப்பு செய்யப் படுகிறது.
இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால், வாகனங்களின் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். டிரைவர் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்,'' என்றார்.
Tags
பொள்ளாச்சி