கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது பிரச்சாரத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
இதை நிறைவேற்றும் வகையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்.15-ஆம் தேதி உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த தொகையை பெற்ற பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரவேற்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் பல்வேறு வகைகளில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதனை வரவேற்று தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே தடங்கம் கிராமத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி அவர்களின் துணைவியார் லட்சுமி சுப்ரமணி தங்களது வீட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவித்து நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என வண்ண கோலமிட்டு வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Tags
அரசியல்