பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி அக் 10-

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை நடத்திவரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துவக்க நிகழ்வு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தர்மபுரி கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் நாகராஜ் துவக்கிவைக்கப்பட்டது. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) கோபிநாத் வரவேற்க, கல்லூரி முதல்வர் பாக்கியமணி தலைமையுரை வழங்கினார்.

நிகழ்வில் சாலைப் பாதுகாப்பு குறித்த விளக்கக் காட்சிகளுடன், மாணவ மாணவியர் தங்களுடைய இல்லத்தில் இருந்து கல்லூரி அடையும் வரை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் குறித்தும், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாத காரணம் குறித்தும், தமிழகத்தில் ஒரு வருடத்தில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் தோழன் அமைப்பின் ஜெகதீஸ்வரன் விளக்கினார்.

விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காக்கும், தமிழக அரசின் "நம்மை காக்கும் 48" திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யாருக்கேனும் விபத்து நடந்தால் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்களையும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியவருக்கு கிடைக்க வேண்டிய பொன்னான நேரம் குறித்தும், எவ்வாறு ஆம்புலன்ஸை அழைப்பது போன்ற விஷயங்களை போன்றவை விழிப்புணர்வாக ஏற்படுத்தப்பட்டது அதைத்தொடர்ந்து கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்காக சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதை, ஓவியம் மற்றும் வாசகப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பாக கவிதை, ஓவியம் மற்றும் வாசகங்கள் எழுதியவர்களுக்கும், நிகழ்ச்சி நடக்கும்போது கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் தெரிவித்த மாணவ மாணவிகளுக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சாலைப் பாதுகாப்பு துண்டறிக்கை வழங்கப்பட்டது. 
இறுதியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பென்னாகரம் உதவிக் கோட்டப் பொறியாளர் விஜய் சாலைப் பாதுகாப்பு உறுதி மொழியை மாணவ, மாணவிகள் ஏற்கச் செய்தார். 

இந்த நிகழ்வில் பென்னாகரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு இளநிலைப் பொறியாளர் திரு.தமிழரசு,
நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال