நூறுநாள் வேலை திட்டத்தில் சம்பள பாக்கி கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தருமபுரி அக்-10

நூறுநாள் வேலை திட்டத்தில் சம்பள பாக்கி கேட்டு தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு சம்பள பாக்கி உடனே வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை 200 நாளாகவும்
சம்பளத்தை ரூ.600/- ஆகவும் உயர்த்தி உடனே வழங்கவேண்டும்.அணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிபந்தனை இன்றி வேலை வழங்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை மற்றும் ஊதா கலர் அட்டையை உத்திரவாதப்படுத்தவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக வருகைப்பதிவேடு வைக்க
வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஒன்றிய தலைவர் பி.திருஞானம், தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து ஒன்றிய தலைவர் கே.சுசிலா,
மாவட்டக்குழு உறுப்பினர்கள். மாதம் மாதம் எஸ்.துளசி, ராமசாமி,ஜெயக்கொடி, அங்கம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
Previous Post Next Post

نموذج الاتصال