தருமபுரி அக் 12-
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய பேரவை கூட்டம் தருமபுரி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் எம்.ஜெயந்தி தலைமை வகித்தார்.என்.ராஜம்மாள் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.என்.நூராணி வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் பி.வளர்மதி துவக்கி வைத்து பேசினார்.ஒன்றியசெயலாளர் எஸ்.ரீனா வேலை அறிக்கை வாசித்தார்.ஒன்றியபொருளாளர் பி.ம்தம்மாள் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.மாவட்ட துணைத்தலைவர் ராமன் வாழ்த்தி பேசினார்.மாவட்ட தலைவர் சி.காவேரி சிறப்புரையாற்றினார்.
மாநில செயலாளர் பி.மகேஸ்வரி நிறைவுறையாற்றினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒன்றிய தலைவராக எம்.ஜெயந்தி,ஒன்றிய செயலாளராக எஸ்.ரீனா பொருளாளராக பி.மாதம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதலமைச்சரின்
காலை உணவு திட்டத்தை தனியாருக்கு தாரைவாப்பதை நிறுத்திவிட்டு அனைத்து பள்ளிகளுக்கும்
விரிவுபடுத்தி திட்டம் சிறப்படைய உள்கட்டமைப்பு வசதியின் உள்ள சத்துணவு மைய ஊழியர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.ஓய்வுபெறும் அமைப்பாளர்களுக்கு ரூ 5 இலட்சமும் சமையலர் மற்றும் சமையல் ஈதவியாளருக்கு ரூ 3 இலட்சம் வழங்கவேண்டும்.ஓய்வுபெறும் சத்துணவு ஊழியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஊதியம் ரூ 9000வழஙகவேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அம்பிகா நன்றி கூறினார்.
Tags
தர்மபுரி